Sunday 20 September 2015

அறப் படிச்ச முட்டாளை பிரதிநிதியாகி........ உன் தலையில் நீயே மண்ணை அள்ளிக் கொட்டி விட்டாயடா தமிழா?

இதற்குத் தானா ஆசைப்பட்டாய் ? 

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று முடிவு செய்வது அரசியல் அரங்கு அல்ல, மாறாக அது நீதி விசாரணையிலேயே முடிவு செய்யப்படவேண்டும் என்று சுமந்திரன் கூறுகிறானே. அவனுக்கு அறிவில்லையா? அமெரிக்கா ஒரு அரசியல் தீர்மானம் கொண்டுவந்து ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்றால், உலகமே ஏற்றுக்கொள்ளுமே. இதில் எங்கே நீதி விசாரணை இருக்கிறது ? எல்லாமே அரசியல் தான்.

ரணிலிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு அரசைக் காப்பாற்றத் துடிக்கும் சுமந்திரனும் அரசியல் செய்கிறார். விரைவில் காய்களை நகர்த்தி முடித்தால், அமைச்சர் பதவி காத்திருக்கிறது. தமிழா!! ஏமாந்தது நீ மட்டுமே.

நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கும் இதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாக தோன்றவில்லை. இதை நாம் இனப்படுகொலை என்று சொல்லமுடியாது என்கிறார் சுமந்திரன். பின்னர் எப்படி இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அது இனப்படுகொலைதான் என விபரமாக விளக்கித் தீர்மானம் கொண்டு வந்தார். அதை ஒருதடவை படித்திருந்தால் தெரிந்திருக்கும்.

தமிழர்களுக்குள் இருந்து அதுவும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவரிடமிருந்து ‘இனப்படுகொலை மறுப்பு, பொது வாக்கெடுப்பு மறுப்பு குரல்’ வருகிறது என்பது மிக மோசமான அரசியல்.

தமிழரசுக் கட்சிக்குள் வேறு சட்டத்தரணிகள் வராதபடி திட்டம் போட்டுச் செயற்படுகிறார். ஒவ்வொருவராக ஓரம் கட்டுகிறார். சம்பந்தரின் பின்னர் கூட்டமைப்பின் முழுக் கட்டிப்பாட்டையும் தானே எடுக்கும் முயற்சி இது. தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

முதலில் தனது பக்கம் எடுக்க முயற்சி. வராதவர்களை வெளியேற்ற நடவடிக்கை. இப்போது நடவடிக்கையில் இருப்பவர்கள் ஸ்ரீதரனும், விக்னேஸ்வரனும். ஆனந்தி, சுரேஷ் ஓரம்கட்டப்பட்டு விட்டனர். மாவை ரணிலின் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு சுமந்திரனுக்கு சாமரை வீசுகிறார். எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயக அரசியல் ஒரு சர்வாதிகாரம் தான். அதுதான் இப்போது கூட்டமைப்பு நடாத்துகிறது. எவ்வளவு காலத்துக்கு இதை அனுமதிக்கப் போகிறோம்.

சுமந்திரனுக்கு எமது வலிமையான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறோம்.

No comments:

Post a Comment