இலங்கை அரசு சொன்னவுடன் வன்னியில் இருந்த தமது அலுவலகங்களை எல்லாம் மூடிவிட்டு, தம்மை விட்டுப் போகவேண்டாம் என ஓலமிட்ட மக்களையும் கைவிட்டுவிட்டு தமது பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு ஐ.நா.வெளியேறியபோது அவர்களுக்குத் தெரியாதா வன்னியில் ஒரு மனிதப் படுகொலை நடக்கப் போகிறது என்பது.
ஆனாலும், எமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குற்றவாளியிடமே நாம் நீதி கேட்டு முறையிடுகின்றோம்? ஏனென்றால், ஐ.நா. ஒரு சர்வதேச அமைப்பு. சில அரசியல் நெருக்கடியினால், தவறிழைத்து விட்டது என்பது உண்மை. அது மீண்டும் மீண்டும் தவறு செய்யாது. ஒரு பிராயோச்சித்தம் செய்து தான் செய்த தவறை உலகத்தின் கண்களுக்கு மறைத்துக் கொள்ள முற்படும் என்பதே எமது நம்பிக்கை.
அதை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போகிறோமா? என்பதுதான் முக்கியமான கேள்வி.
No comments:
Post a Comment